Showing posts with label பதிவர் குழுமம். Show all posts
Showing posts with label பதிவர் குழுமம். Show all posts

Sunday, 28 March 2010

"சென்னை இணைய எழுத்தாளர்?" சந்திப்பு!!

என்னடா இவன் தான் சென்னைல இல்லையே..ஆனா இதபத்தி பதிவு போடறான்னு நீங்க முனுமுனுக்குறது நல்லாவே கேக்குது. ஆனா பாருங்க, நமக்கு எப்பவுமே இந்த மாதிரி விஷயங்கள்ல ஈடுபாடு ஜாஸ்தி. அதான் நம்ம கருத்த பதிஞ்சுருவோம்னு..டோண்டு பதிவுல என்ன விவாதிக்கபட்டதுன்னு தெளிவா சொல்லி இருக்கார். சிவராமன் பதிவையும் படிங்க. 


சென்னை இணைய எழுத்தாளர்கள் சங்கம், இல்ல குழுமம், இல்ல சமுதாயம், அட பேரு வைக்கிறதே கஷ்டமா இருக்கும் போல. லக்கி  சொன்ன மாதிரி, என்னை எல்லாம் எழுத்தாளர்னு யாராவது கூப்பிட்டா, அப்புறம் தமிழ்ல இன்னொரு புது வார்த்தை கண்டுபிடிக்கணும், உண்மையான எழுத்தாளர்களை அழைக்க. :-) நமக்கு தமிழ் அகராதில சேர்க்க பல அறிவியல் சொற்கள் இருப்பதால, இந்த வேலை நமக்கு வேண்டாமே. 


பேர பத்தி நா பேசுறதே தப்பு. ஏன்னா, நான் இப்படி ஒரு சங்கம் வேணுமான்னு கேக்குற குழுவை சேர்ந்தவன். சரி ஒரு நிமிஷம் வேணும்னு வச்சுக்குவோம்...நன்மைகள்/தீமைகள் என்ன?


ஒரு குழுவிற்கு எப்பவுமே தனி மரியாதை உண்டு. தனி மனிதர்கள் சாதிக்க முடியாத பல விஷயங்கள் குழுக்களால் சாதிக்கப்பட்டு இருக்கு. ஆனால் அந்த குழுக்களுக்கு எல்லாம் ஒரு பொது நோக்கம், பொது பிரச்சனை இருந்தன. ஒரு கிராமத்திற்கு தண்ணீர் வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இலங்கை தமிழர்கள் சுதந்திரமாய் சுவாசிக்க வேண்டும் என்பது வரை. நம் குழுவில் அப்படி என்ன பிரச்சனை இருக்கு? (பல வகைகளில் வேறுபடும் நம் எல்லாரையும் ஒன்றாய் கட்டி போடும் அளவு?)



          அ. டோண்டு/சுகுணா திவாகர் சந்தித்த மாதிரி போலிகள் தொல்லை. 
                            இது பெரிய பிரச்சனை தான். ஆனால் இதில் உதவ சைபர் கிரைம் காவலர்கள் தான் ரெம்ப முக்கியம் என்பது என் எண்ணம். ஒரு தனி மனிதனின் கோரிக்கைக்கும் ஒரு சங்கத்தின் கோரிக்கைக்கும் வித்தியாசம் இருக்குமா என்று தெரியவில்லை. 
          ஆ. பயிற்சிகள்/போட்டிகள்/தொழில்நுட்ப உதவிகள்:
                       ஒரு சங்கம் இவற்றை எடுத்து நடத்தும் போது, வரவேற்ப்பு பெரிதாக இருக்கும். ஆனால் இதில் கருத்து வேறுபாடுகளும், அதனால் நமக்குள்  பிரச்சனைகளும் வர ஆரம்பிக்கும். ஒரு கவிதை போட்டியில் என் ஆதர்ஷ எழுத்தாளர் நடுவர் ஆக வேண்டும் என்பதில் ஆரம்பித்து, "கவிதை போட்டியின் பரிசு சிறுகதை போட்டியின் பரிசை விட அதிகம்", "பரிசு கவிதைகள் எல்லாம் பின்நவினத்துவ கவிதைகள்" என்பது வரை பல குற்றசாட்டுகள் வரும். தனியாய் இவற்றை நடத்தும் போது, அது அவர்கள் பணம், அவர்கள் எது செய்தாலும் கேட்க நமக்கு உரிமை இல்லை. ஆனால் சங்கம் பொது. நேற்று அமைப்பில் சேர்ந்து, இன்னும் நம் நோக்கங்களை புரிந்து கொள்ளாத ஒருவர், உறுப்பினர் என்ற உரிமையில் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கேள்வி கேட்க முடியும்.
       இ. சங்க நிர்வாகம்:
               பணமும், பதவியும் தான் மனிதர்களை பொறாமை கொள்ள செய்யும் செயலில் முன்னிலை பெறுபவை. பதிவர்களும் மனிதர்கள் தானே? சங்க தேர்தல்கள், செலவினங்கள் பல கேள்விகளை எழுப்பும். சங்க நிகழ்ச்சிகளுக்கு ஓடியாடி வேலை செய்பவர்கள், தங்களுக்கு பிடித்த வகையில் அந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்தால் கூட பலர் அதனை கேலி/கேள்வி செய்வார்கள். "ஒரு சல்லி காசு வாங்காம, நான் ஏன் இத்தனை வேலை செய்ய வேண்டும் என்று உண்மையாய் உழைப்பவர்கள் என்னும் பொழுது,  பதவி ஆசை பிடித்த குழு நிர்வாக பொறுபேற்கும். அப்புறம் விழுப்புரம் தான்... :-)
     ஈ. பதிவுலகம் இன்னும் சில வருடங்களில் லட்சம் பேர் வாழும் வலை இடம் ஆக போகிறது. இத்தனை பேரை நாம் எப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வர போகிறோம். ஒரு சின்ன ஹாலில்  நடந்த கூட்டத்தில் நமக்குள் பல கருத்து வேறுபாடுகள்.  இந்த முயற்சி தமிழர்கள் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது போல. திமுகவும் அதிமுகவும் மதிமுகவும் ஒரு தலைவரை ஏற்று கொள்வது போல. 
உ.  பலர் தாங்கள்  சென்னையில் இல்லை, ஆனால் அவர்கள் பணத்தில் பயிலரங்கு நடக்கிறது மாதிரியான பல வினாக்கள் வரும். 


நான் எதோ இது நடக்கவே முடியாத விஷயம் என்று சொல்வதாக எண்ண வேண்டாம். "நானும் ரவுடி" என்று சொல்லிக்கொள்வதில் எனக்கும் பெருமை தான். என் கருத்துகள் இதோ:


            மின்னச்சல் குழுமமாக நாம் இருக்கலாம். எல்லாரிடமும் பணம் கேட்காமல், தருபவர் தரட்டும் என்ற கொள்கையுடன், வரும் பணத்தில் நம்மின் மிக அத்தியாவசிய தேவையான, அனானிகளை களைவது மாதிரியான செயல்களை மட்டும் செய்வோம். (ஓர் அளவுக்கு மேல் பணம் வந்தால், அதை மறுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்). போட்டிகளோ, பயிற்சிகளோ இதன் மூலம் வேண்டாம். உதவிகள் சங்கம் மூலம் வேண்டாம். சங்க மின்னச்சல் மூலம் உதவி கோரலாம். ஆனால் உதவில் தனிப்பட்ட முறையிலயே செய்யப்பட வேண்டும். நம்முடைய நோக்கங்களை மிகவும் குறைவாக வைத்து கொள்வதினால், நிறைய பேரை குழுமத்தில் இணைக்க முடியும். பதிவர் அல்லாத வாசகர்களை கூட இதில் இணைய வாய்ப்புண்டு  நிர்வாகிகள் என்று ஒரு குழு தேவை இல்லை. பதவி இல்லை. பணம் இல்லை. போட்டியோ பொறமையோ இருக்காது. நாம் எல்லாரும் ஒரு குழுவில் பதிவு செய்து இருப்போம், ஆனால் அந்த குழு நமக்கு மிகவும் அத்தியாவசிய உதவிகளை மட்டுமே செய்யும். பிடிக்காதவர்கள் கூட "ஊரோடு ஒத்து வாழ" குழுவில்  சேருவார்கள். 


எல்லாமே என் கருத்துக்கள். நான் பதிவு எழுதவதே அபூர்வம். எனவே எனக்கு இதை பற்றி பேச எவ்வுளவு தகுதி இருக்குனு தெரியாது. புடிச்சா எடுத்துக்கோங்க, இல்லாட்டி யாருக்கும் நஷ்டம் இல்ல. 


Very less we try to accomplish, more people will agree to it!!