Saturday, 22 May 2010

மங்களூர் விமான விபத்து

மங்களூர்..நான் வாழ்ந்த ஊர்களில் மிகவும் அமைதியான நகரம். சிறு சிறு மத கலவரங்கள் தவிர்த்து பல மொழிகள் (கன்னடம், மலையாளம்,துளு,கொங்கனி,ஹிந்தி) பேசும், பல மதங்களை சேர்ந்தோர் சேர்ந்து வாழும் இடம். என்றேனும் மங்களூர் பற்றி ஒரு பதிவு போடவேணும் என்று எண்ணம் உண்டு.வரைவில் சில குறிப்புகள் குறித்து வைத்திருந்தேன். நான் பார்த்த ஆள் அரவம் அற்ற கடற்கரைகள், எந்நேரமும் பரபரத்துக்கொண்டு ஓடும் உள்ளூர் பேருந்துகள், நேர்மையான ஆட்டோகாரர்கள் (நான் இன்போசிசில் வேலை செய்பவன் என்று தெரியும் வரை!!), பாக்கெட் மணி தினம் ஆயிரம் என்ற அளவில் செலவு செய்யும் கல்லூரி பசங்க/பொண்ணுங்க(துபாய், பாம்பே பணம்), அழகான பெண்கள், அடித்துப் பெய்யும் மழை, நான் பார்த்த பெரிய பாம்புகள் என்று பல குறிப்புகள். இவை எல்லாம் நான் பொத்தி பாதுகாத்த நினைவுகள். என் மூளையின் நெடுங்கால ஞாபக அறைகளில் பூட்டி வைக்கப்பட்டு உள்ளவை. நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்கப்படாதவை.

ஆனால் இந்த பதிவு மேலே சொன்ன எதை பற்றியும் அல்ல. இது நேற்று (21-மே-2010 ) நடந்த விமான விபத்து பற்றியது. காலை 6:30 மணி. பனி மூட்டம் இல்லை. மழை இல்லை. (லைலா அந்தப்பக்கம் சென்றிருந்தால் விமானம் ரத்து செய்யப்பட்டிருக்குமோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை). விமானம் தரை இறங்கும் ஓடுபாதையில் எந்த பிரச்சனையும் இருந்ததாக தெரியவில்லை. இந்த விமானி இதே விமானதளத்தில் இதே விமானத்தை பத்தொன்பது தடவை இறக்கியுள்ளார். சகவிமானி 66 தடவை இறக்கி உள்ளார். எனவே இது ஒன்றும் மிக சாதாரண தொழிநுட்பக் கோளாறாய் தெரியவில்லை.

முதலில் விமானத்தள அமைப்பை பாப்போம்.
நேர்கோட்டில் தெரிவது பழைய ஓடுதளம். 45 டிகிரி கோட்டில் தெரிவது 2006-யில் திறக்கப்பட்ட புது ஓடுதளம். புது ஓடுதளத்தின் நீளம் இரண்டு கிலோமீட்டர். விபத்துக்குள்ளான விமானம் தரை இறங்க இது போதும். இதற்கும் மேல் ஓடுதள முடிவில் மணல் குன்று ஒன்றும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.(மற்ற விமான தளங்களில் உள்ளது போல பெரிய மணல் குன்று இல்லை என்றாலும், சிறிய அளவில் உள்ளது). பின் ஓடுதளத்தில் உள்ள அபாயம் என்ன? ஓடுதளம் ஒரு குன்றின் மேல் உள்ளது. ஆங்கிலத்தில் இதை "Tabletop" என்று சொல்கிறார்கள். எனவே ஒரு சிறு தவறு கூட பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம். கம்பியின் மேல் நடப்பது போல. கரணம் தப்பினால் மரணம். எனவே இங்கு புதிதாய் வரும் விமான நிறுவங்களுக்கு இதற்காவே தனியாய் பயிற்சி நடப்பதாய் சொல்கிறார்கள். நன்கு அனுபவம் வாய்ந்த விமானிகளே இங்கு தரை இறக்க அனுமதிக்க படுவதாய் சொல்கிறார்கள். (இந்த சம்பவத்தில் அது உண்மையாய் தான் தெரிகிறது).

விமானி 2000 அடி தள்ளி தரைதொட்டுளார். ஏன்? தெரியவில்லை.

மொத்த 8000 அடி ஓடுதளத்தில், விமானம் இறங்க தேவை 6000-7000 அடிகள்.அவர் 2000 அடிகள் தள்ளி தரை இறங்கியதாலும், வேறு சில(?) காரணங்கள் (விமானம் நேர்கோட்டில் இல்லாமல், வலது பக்கம் சிறிது தள்ளி சென்றுவிட்டதாக ஒரு உறுதிபடுத்தபடாத தகவல்),
காரணமாக, விமானி ஓடுதளத்தில் இருந்து விலகி விமானத்தை செலுத்தி உள்ளார். குன்றின் மேல் ஓடுதளம் உள்ளதால், விமானம் குன்றில் இருந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது.

இப்படி உடனடியாக யார் மேலும் குற்றம் சொல்ல முடியாத நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி கிடைக்கும் வரை எந்த முடிவுக்கும் நாம் வர முடியாது. இது தெரிந்தும் பல ஆங்கில செய்தி தொலைகாட்சிகள் யார் மேலாவது பழியை போட துடித்துக்கொண்டு இருகின்றன. வருத்தமான விஷயம்.

விமானி "Air India"வின் தொழிலாளி இல்லை என்றும், அவர் வெளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்பதாகவும், Contract அடிப்படையில் இந்த விமானத்தை இயக்குவதாகும் சொல்லப்படுகிறது. இதுவும் கூட விபத்துக்கு காரணமாய் இருக்கலாமோ என்று கேள்வி உள்ளது. அவர் தன் மீது குற்றம் வந்து விட கூடாது என்று, அவசரத்தில் விமானத்தை ஓடுபாதையில் இருந்து திருப்பி விட்டதாய் கூறப்படுகிறது!!! எனக்கு இந்த வாதத்தில் நம்பிக்கை இல்லை. அவர் கடைசி நொடிகளில் எடுத்த முடிவுகள் அவர் உயிரையே எடுக்கும் என்று அறிந்து எடுக்கப்பட்டவை. அதில் எப்படி அவர் தவறு செய்து இருக்க முடியும்? பலி ஆடு தேடும் செயல் இது என்றே எண்ணுகிறேன்.

எனவே முடிவுகளுக்கு செல்லாமல் நான் என் கேள்விகளை மட்டும் முன் வைக்கிறேன்.

விமானத்தில் கடவுள் அருளால் தப்பியவர்கள் விமானத்தின் நடுவில் அமர்ந்தவர்கள் மட்டும் இல்லை. ஏழாம், நாற்பத்தி ஐந்தாம் இருக்கையில் இருந்தவர்கள் தப்பி உள்ளனர். எனவே ஒரு சிலர் தப்பிக்க முடியும் என்றால், மற்றவர்கள் ஏன் முயலவில்லை? முன்னமே தெரிந்திருந்தால் அவர்களை காப்பற்ற வழிகள் உள்ளனவா? விமானி பயணிகளுக்கும் தகவல் மையத்திற்கும் தன் நிலை பற்றி முன்னரே விளக்கினாரா?

போயிங் ஏற் இந்தியாவிற்கு அளித்த விமானங்களில் ஏதேனும் கோளாறு இருக்க வாய்ப்புண்டா? இந்த நிறுவங்களை நான் என்றுமே நம்பியதில்லை. நாம் எல்லாம் இரெண்டாம் தர மக்கள் இவர்களுக்கு. போயிங் இந்த விசாரணையில் உதவி அளிப்பதாய் வாக்களித்து உள்ளது. ஆனால் அவர்களும் குற்றம் செய்து இருக்க வாய்ப்புள்ளது என்பதை விசாரணை செய்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஓடுபாதையில் ஏதேனும் சிதைவு இருக்க வாய்ப்புண்டா?

ஆங்கில தொலைகாட்சிகள் பலி ஆடு தேடிக்கொண்டு இருக்க, ஒரு கன்னட தொலைக்காட்சியில் சிறப்பான அலசல் பார்த்தேன். கன்னடம் புரியாவிடினும் இந்த விடியோவை பாருங்கள். புரியும்.







பதில்கள் கிடைக்கும் வரை இந்த ஓடுபாதை மூடப்பட வேண்டும். இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும் பரவாயில்லை. மனித உயிர் அனைத்தையும் விட மதிப்பானது.

இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் என் வருத்தங்கள். எங்கள் பிரார்த்தனைகளில் நீங்கள் உள்ளீர்கள்.

Thursday, 8 April 2010

ஐபோனில் தமிழ்!!

ஐபோன் பயன்படுத்தி இருந்தீர்கள் என்றால், அதில் தமிழ் வாசிப்பது மிகவும் கடினம் (பிச்சு போட்ட ஜிலேபி மாதிரி) என்பது உங்களுக்கு தெரியும். இது வரை அதற்கு இருக்கும் ஒரே பதில் செல்லினம் என்னும் ஐபோன் மென்பொருள் மட்டுமே.


படம் உதவி: http://sellinam.com/


சரி!! செல்லினத்தில் தான் தமிழ் படிக்க முடியுமே அப்புறம் எதற்கு இந்த பதிவு என்று யோசிக்கிறிங்க போல? பொறுமை. பொறுமை இணையத்தினும்  பெரிது. :-)

செல்லினத்தில் ஒரு வலைதளத்தை படிக்க, அந்த தளத்தின் RSS ஓடையை கொடுக்க வேண்டும்.

உங்கள் வலைத்தளம் ப்ளொக்கரில் இருந்தால், உங்கள் RSS ஓடை
http://blogname.blogspot.com/feeds/posts/default?alt=rss
blogname என்பதற்கு பதில் உங்கள் வலைதள முகவரி இருக்க வேண்டும்.

இப்படி நீங்கள் வாசிக்கும் எல்லா வலைதலங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக இதில் இணைத்து வாசிக்கலாம். 


ஆனால் என்னை மாதிரி பல வலைப்பூக்களை தொடர்பவர்கள், ஒன்றன் பின் ஒன்றாக எல்லாவறையும் இணைத்து, அப்புறம் புதிதாக ஏதாவது பதிவு வந்திருக்கான்னு நொடிக்கு ஒரு தடவ பார்த்துகிட்டு, நடக்குற காரியமா? அதனால் பல நாட்கள் இந்த மென்பொருளை நான் உபயோகபடுத்தவில்லை. அப்புறம் ஒரு நாள் நானே உக்கார்ந்து யோசிச்சேன். என் "கூகிள் ரீடர்" நான் தொடரும் வலைப்பூக்களில் வரும் புதிய பதிவுகளை தொகுத்து தருகிறது. அப்படி என்றால் என் "கூகிள் ரீடர்"யின் வெளியிடை ஒரு RSS ஓடையாக  கொண்டு வர முடியும் எனில், அந்த ஒரு RSS ஓடையை மட்டும் செல்லினத்தில் இணைத்து விட்டால் போதும், நான் தொடரும் அத்தனை தளங்களும் செல்லினத்தில். :-)

It will be a mobile version of my google reader. :-)

சொல்வது எளிது. ஆனால் செயல்பட ஆரம்பித்த பின் தான் அதில் உள்ள கடினங்கள் புரிந்தன.

முதலில் "கூகிள் ரீடர்"யின் வெளியிடை ஓடையாக மாற்றுவது எப்படி?

இதற்க்கு நீங்கள் முதலில் நீங்கள் வாசிக்க நினைக்கும் வலைத்தளங்களை ஒரு மூட்டையாக கட்ட வேண்டும். கிழே உள்ள படத்தை பாருங்கள்.

இதில் உள்ள "create a bundle" என்பதை தேர்தெடுத்து மூட்டை கட்டுங்கள். பின் அந்த மூட்டை ஒரு கோப்பாக வரும். அந்த கோப்பை தேர்ந்தெடுத்து விட்டு, வலது பக்கம் மேலே "show details" சுட்டியை சொடுக்கினால், கீழ் உள்ள படத்தில் உள்ள படி உங்கள் "ATOM FEED" தெரியும். இது 'atom' ஊட்டம், இதை RSS-ஆக மாற்றினால் தான் செல்லினத்தில் படிக்க முடியும்.



எனவே உங்கள் atom ஊட்டத்தை நகல் எடுத்து கொண்டு, www.feedburner.com சென்று உங்கள் கூகிள் கணக்கின் முலமாக உள்சென்று, மேலே நகல் எடுத்த சுட்டியை ஓட்டினால், ஒரு சில கேள்விகளுக்கு பின், அது உங்களுக்கு ஒரு புது சுட்டி தரும்.




மேலே உள்ள "Feed Address"சை நகல் எடுத்து உங்கள் கைபேசியில் செல்லினத்தில் சென்று புது உட்டமாக கொடுத்து விட்டால், பின் உங்கள் பதிவுகள் அனைத்தும் அழகு தமிழில் உடைந்த ஜிலேபிகளாக இல்லாமல் படிக்கலாம்.

நான் கூறியதில் ஏதேனும் விடுபட்டு போயிருப்பின் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும். ஏதேனும் புரியவில்லை என்றாலும் பின்னுட்டத்தில் கேளுங்கள்.

நான் தொடரும் தளங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், http://feeds.feedburner.com/senthilfollows சுட்டியை உபயோகித்து கொள்ளுங்கள்.

இன்னொரு உதவி. கீழ் உள்ள ஆப்பிள் தளத்திற்கு சென்று தமிழ் சரியாய் தெரியவில்லை, என்ற குறையை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
http://www.apple.com/feedback/iphone.html

Monday, 5 April 2010

Moving Sale!!

Usually when people move to India from here, they put a "moving sale" with the items they have and the price they expect. 

I am moving to a new house (for rent only :)) within my town. I am staying in the current house for about three years. So I also sent a moving sale list. Read and remember, you need to reserve, if you want any of these items which will not be available anywhere else in the world. :-)


S.No
Item
Rate (in Cents)
1
2 year old newspapers (2006-2007). Good Collection. Will be really useful to understand how world got into recession and will also help you to get to know the community you are living.

Free: Las Vegas Pamplets.
500
2
Door Mat. I suggest you use this, if you dont want any relative/friend to come to your house. Very effective. I myself think twice before entering my room.
21.25
3
Some Inch Old TV. Works most of the time. It is like a pet, you just need to sit next to it and tap on it every now and then. 
Anything you pay
4
Indian Masalas.Smells good. But the expiry date in the packet says 2007, i have no idea why they expire soon.Yesterday my roomate used it on his briyani and he hasn’t died yet. So I don’t know, how Masala expired. 
50% discount of marketed price  
5
Different kind of watch boxes. Some1 was very crazy more on watch boxes than on the watches. But unfortuantely couldnt carry them to India. 
Please take as much as you want.
6
Garbage bin. I give 100% Guarntee that any spoiled food that you put on this Garbage bin will not give a bad smell, because the Garbage bin by itself gives out a smell that will beat everything else. 
5
7
Sofa. Has no paperwork on this. No idea which year, it was bought. If you find any peanuts, kodbulae or any other kind of Indian snacks, I promise you that, I will not charge you for that.
245.67
8
Party items. Starting from tissue paper to soft drink cups. Enough for 2-3 Parties. Disclaimer is, as the house was full, I kept this in Bathroom cupboard for an year. Hope you don’t mind
22
9
Vaccum cleaner. It works. Gives the same noise as other VCs. Moves the same way as others. Very good condition,Except that I think the filter is gone and hence it doesn't clean. 
12
10
Hangers. Again good condition. But I suggest you use some deodrant on the hangers,before the use, else you may have to wash your clothes again. 
.1/hanger
11
Light stand. The control in the light is gone, in one of our epic battles in the house. So you have to plug out & plug in the light whenever you want to switch off/on. If bulb ever gets fused out, I suggest you throw the lamp, instead of trying to change the bulb and getting Asthma.
2
12
Wooden chair. Only issue is last winter took the bottom of the chair and this winter took the back of the chair. But you can rest your head and hands on it peacefuly. Other parts of the body has to be in air. I suggest this for people who execise or do yoga.
10
13
Printer. Inkjet printer. Works fine. Just takes some time and gives a lot of noise. Other day, I have to print a pizza coupon and I connected this printer for printing. But couldn’t print, so I took pencil and scale and drew all barcodes, as printer took more time. Unfortunately, pizza hut didnt accept my drawing saying their scanner is not scanning it. they have raised a ticket with their IT and i am waiting for the resolution.
2
14
TV stand. It is surprising that it still stands. Again not for Astma people, others can venture @ their own risk
6
15
Cooking utensils. As most of us who stayed in the house were black(as per indian standards), we painted our cooking stuff also black, by leaving it in stove for an hour or so. You can't find whether it is made of aluminium or steel. The only color visible is black.
10/utensil

Any comments on the list? :)

Sunday, 28 March 2010

"சென்னை இணைய எழுத்தாளர்?" சந்திப்பு!!

என்னடா இவன் தான் சென்னைல இல்லையே..ஆனா இதபத்தி பதிவு போடறான்னு நீங்க முனுமுனுக்குறது நல்லாவே கேக்குது. ஆனா பாருங்க, நமக்கு எப்பவுமே இந்த மாதிரி விஷயங்கள்ல ஈடுபாடு ஜாஸ்தி. அதான் நம்ம கருத்த பதிஞ்சுருவோம்னு..டோண்டு பதிவுல என்ன விவாதிக்கபட்டதுன்னு தெளிவா சொல்லி இருக்கார். சிவராமன் பதிவையும் படிங்க. 


சென்னை இணைய எழுத்தாளர்கள் சங்கம், இல்ல குழுமம், இல்ல சமுதாயம், அட பேரு வைக்கிறதே கஷ்டமா இருக்கும் போல. லக்கி  சொன்ன மாதிரி, என்னை எல்லாம் எழுத்தாளர்னு யாராவது கூப்பிட்டா, அப்புறம் தமிழ்ல இன்னொரு புது வார்த்தை கண்டுபிடிக்கணும், உண்மையான எழுத்தாளர்களை அழைக்க. :-) நமக்கு தமிழ் அகராதில சேர்க்க பல அறிவியல் சொற்கள் இருப்பதால, இந்த வேலை நமக்கு வேண்டாமே. 


பேர பத்தி நா பேசுறதே தப்பு. ஏன்னா, நான் இப்படி ஒரு சங்கம் வேணுமான்னு கேக்குற குழுவை சேர்ந்தவன். சரி ஒரு நிமிஷம் வேணும்னு வச்சுக்குவோம்...நன்மைகள்/தீமைகள் என்ன?


ஒரு குழுவிற்கு எப்பவுமே தனி மரியாதை உண்டு. தனி மனிதர்கள் சாதிக்க முடியாத பல விஷயங்கள் குழுக்களால் சாதிக்கப்பட்டு இருக்கு. ஆனால் அந்த குழுக்களுக்கு எல்லாம் ஒரு பொது நோக்கம், பொது பிரச்சனை இருந்தன. ஒரு கிராமத்திற்கு தண்ணீர் வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இலங்கை தமிழர்கள் சுதந்திரமாய் சுவாசிக்க வேண்டும் என்பது வரை. நம் குழுவில் அப்படி என்ன பிரச்சனை இருக்கு? (பல வகைகளில் வேறுபடும் நம் எல்லாரையும் ஒன்றாய் கட்டி போடும் அளவு?)



          அ. டோண்டு/சுகுணா திவாகர் சந்தித்த மாதிரி போலிகள் தொல்லை. 
                            இது பெரிய பிரச்சனை தான். ஆனால் இதில் உதவ சைபர் கிரைம் காவலர்கள் தான் ரெம்ப முக்கியம் என்பது என் எண்ணம். ஒரு தனி மனிதனின் கோரிக்கைக்கும் ஒரு சங்கத்தின் கோரிக்கைக்கும் வித்தியாசம் இருக்குமா என்று தெரியவில்லை. 
          ஆ. பயிற்சிகள்/போட்டிகள்/தொழில்நுட்ப உதவிகள்:
                       ஒரு சங்கம் இவற்றை எடுத்து நடத்தும் போது, வரவேற்ப்பு பெரிதாக இருக்கும். ஆனால் இதில் கருத்து வேறுபாடுகளும், அதனால் நமக்குள்  பிரச்சனைகளும் வர ஆரம்பிக்கும். ஒரு கவிதை போட்டியில் என் ஆதர்ஷ எழுத்தாளர் நடுவர் ஆக வேண்டும் என்பதில் ஆரம்பித்து, "கவிதை போட்டியின் பரிசு சிறுகதை போட்டியின் பரிசை விட அதிகம்", "பரிசு கவிதைகள் எல்லாம் பின்நவினத்துவ கவிதைகள்" என்பது வரை பல குற்றசாட்டுகள் வரும். தனியாய் இவற்றை நடத்தும் போது, அது அவர்கள் பணம், அவர்கள் எது செய்தாலும் கேட்க நமக்கு உரிமை இல்லை. ஆனால் சங்கம் பொது. நேற்று அமைப்பில் சேர்ந்து, இன்னும் நம் நோக்கங்களை புரிந்து கொள்ளாத ஒருவர், உறுப்பினர் என்ற உரிமையில் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கேள்வி கேட்க முடியும்.
       இ. சங்க நிர்வாகம்:
               பணமும், பதவியும் தான் மனிதர்களை பொறாமை கொள்ள செய்யும் செயலில் முன்னிலை பெறுபவை. பதிவர்களும் மனிதர்கள் தானே? சங்க தேர்தல்கள், செலவினங்கள் பல கேள்விகளை எழுப்பும். சங்க நிகழ்ச்சிகளுக்கு ஓடியாடி வேலை செய்பவர்கள், தங்களுக்கு பிடித்த வகையில் அந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்தால் கூட பலர் அதனை கேலி/கேள்வி செய்வார்கள். "ஒரு சல்லி காசு வாங்காம, நான் ஏன் இத்தனை வேலை செய்ய வேண்டும் என்று உண்மையாய் உழைப்பவர்கள் என்னும் பொழுது,  பதவி ஆசை பிடித்த குழு நிர்வாக பொறுபேற்கும். அப்புறம் விழுப்புரம் தான்... :-)
     ஈ. பதிவுலகம் இன்னும் சில வருடங்களில் லட்சம் பேர் வாழும் வலை இடம் ஆக போகிறது. இத்தனை பேரை நாம் எப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வர போகிறோம். ஒரு சின்ன ஹாலில்  நடந்த கூட்டத்தில் நமக்குள் பல கருத்து வேறுபாடுகள்.  இந்த முயற்சி தமிழர்கள் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது போல. திமுகவும் அதிமுகவும் மதிமுகவும் ஒரு தலைவரை ஏற்று கொள்வது போல. 
உ.  பலர் தாங்கள்  சென்னையில் இல்லை, ஆனால் அவர்கள் பணத்தில் பயிலரங்கு நடக்கிறது மாதிரியான பல வினாக்கள் வரும். 


நான் எதோ இது நடக்கவே முடியாத விஷயம் என்று சொல்வதாக எண்ண வேண்டாம். "நானும் ரவுடி" என்று சொல்லிக்கொள்வதில் எனக்கும் பெருமை தான். என் கருத்துகள் இதோ:


            மின்னச்சல் குழுமமாக நாம் இருக்கலாம். எல்லாரிடமும் பணம் கேட்காமல், தருபவர் தரட்டும் என்ற கொள்கையுடன், வரும் பணத்தில் நம்மின் மிக அத்தியாவசிய தேவையான, அனானிகளை களைவது மாதிரியான செயல்களை மட்டும் செய்வோம். (ஓர் அளவுக்கு மேல் பணம் வந்தால், அதை மறுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்). போட்டிகளோ, பயிற்சிகளோ இதன் மூலம் வேண்டாம். உதவிகள் சங்கம் மூலம் வேண்டாம். சங்க மின்னச்சல் மூலம் உதவி கோரலாம். ஆனால் உதவில் தனிப்பட்ட முறையிலயே செய்யப்பட வேண்டும். நம்முடைய நோக்கங்களை மிகவும் குறைவாக வைத்து கொள்வதினால், நிறைய பேரை குழுமத்தில் இணைக்க முடியும். பதிவர் அல்லாத வாசகர்களை கூட இதில் இணைய வாய்ப்புண்டு  நிர்வாகிகள் என்று ஒரு குழு தேவை இல்லை. பதவி இல்லை. பணம் இல்லை. போட்டியோ பொறமையோ இருக்காது. நாம் எல்லாரும் ஒரு குழுவில் பதிவு செய்து இருப்போம், ஆனால் அந்த குழு நமக்கு மிகவும் அத்தியாவசிய உதவிகளை மட்டுமே செய்யும். பிடிக்காதவர்கள் கூட "ஊரோடு ஒத்து வாழ" குழுவில்  சேருவார்கள். 


எல்லாமே என் கருத்துக்கள். நான் பதிவு எழுதவதே அபூர்வம். எனவே எனக்கு இதை பற்றி பேச எவ்வுளவு தகுதி இருக்குனு தெரியாது. புடிச்சா எடுத்துக்கோங்க, இல்லாட்டி யாருக்கும் நஷ்டம் இல்ல. 


Very less we try to accomplish, more people will agree to it!! 

Tuesday, 16 March 2010

அம்மாவும் விடைபெறுதலும்!!

மு.கு: கடந்த வாரத்தில் ஒரு நாள், ஊரில் இருந்து வந்த ஒரு தோழியிடம்  அம்மாவிடம் இருந்து எனக்கு  இட்லி பொடி வாங்கி வர சொல்லியிருதேன். அவள் செல்லும் முன் அம்மாவுக்கு ஒரு கடிதம் தர எண்ணி இருதேன். அப்புறம் வேலை மும்முரத்தில் எழுத ஆரம்பித்து முடிக்க மறந்தேன். இதெல்லாம் அம்மாவுக்கு தெரியாது. அனுப்பிய இட்லி பொடிக்குள்  ஒரு மளிகை கடை சிட்டை. பின் புறம் அம்மா கையெழுத்தில் ரெண்டு வரிகள். 

"செந்திமா, எனக்கு ஒரு லெட்டர் எழுதேன். என்ன வேணா எழுது. ஆனா கண்டிப்பாய் எழுது". அம்மாவின் எழுத்தை பார்த்து சிறிது உணர்ச்சிவசப்பட்டு வரைவில் நெடு நாளாக இருந்த இந்த இடுகையை முடித்தேன். அடுத்த வாரம் இது அம்மாவுக்கு என் கையெழுத்தில் போய் சேரும். :)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பனிரெண்டாம்  வகுப்பு முடித்து முதல் முறை வீட்டை விட்டு /ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று படிக்க பொட்டி படுகையுடன் கிளம்பினேன். (பேச்சுக்கு சொல்லல...உண்மையாவே பெரிய பொட்டி படுக்கையுடன்  தான்). தேடி தேடி எனக்கு என்ன வேண்டும் என்று யோசித்து என் தங்கை பொட்டி கட்டினாள். இத்தனைக்கும் நான் முதலில் தங்கியது  என் சித்தி வீட்டில் தான். அரை மனசுடன் அம்மா அப்பா கூட மதுரைக்கு பஸ் ஏறினேன். (தனியா போனா கல்லூரி கட்டணம் யார் கட்டுறது?). ஒரு பக்கம் என்னமோ நாம பெரிய ஆளு ஆயிட்டதா நினைப்பு. இன்னொரு பக்கம், பள்ளி முடித்து திரும்ப வந்த உடன் பலகாரம் எடுத்து வைக்க அம்மா இருக்க மாட்டங்களே? ஊரு கோபம் எல்லாம் காட்டுவதற்காக சும்மா தங்கையுடன் சண்ட போட முடியாதே.  என்ன தான் திட்டினாலும் ,அதிகாலை எழுப்பி விட்டு, ஹார்லிக்ஸ் குடுத்து, கிரிக்கெட் பாக்க சொல்லும் அப்பா? ஹ்ம்ம்..


பேருந்தில் அம்மா மடி படுத்து தூங்கினேன். "ஞாபகம் இருக்கா? காலேஜ் போற" என்ற அப்பாவை ஒரு முறை முறைத்து விட்டு அம்மா மடியில் நிம்மதியாய் தூங்கினேன். மனதுக்குள் ஆயிரத்தி எட்டு கேள்விகளுடன் சென்ற மறக்கவே முடியாத ரெண்டு மணி நேர பயணம் அது. 


அதன்பின் வார விடுமுறைக்கு நான் காரைக்குடி வரும் போது எல்லாம், திரும்பி போகும் போது அம்மா தான் என் கூட பேருந்து நிலையம்  வரை வருவார்கள்.இது ஒரு உணர்வு பூர்வமான நம்பிக்கை. ஒரு தடவை நான் அப்பாவோட போக, அந்த முறை பேருந்தில் அம்பது ருபாய் நோட்டு ஒன்றை நான் தொலைத்துவிட, "இதுக்கு தான் நான் போறேன்னு சொன்னேன்"னு   அம்மா, அப்பா கூட பெரிய சண்டை போட்டதாக தங்கை அடுத்த வாரம் சொன்னாள். 


எங்கள் வீட்டில் இருந்து ரெண்டு  கி.மீ நடக்க வேண்டும் பேருந்து ஏற. போற வழி ஒன்னும் பச்சை பசேல் விவசாய நிலம் இல்லை. தரிசு நிலம். எல்லாம் பிளாட் போட்டு பத்து வருசமா விக்காம கிடக்குற நிலம். ஒத்தை அடி பாதைல அம்மா கூட கதை அடிச்சுகிட்டே நடந்தா ரெண்டு கி.மீ நடந்ததே தெரியாது. என்ன தான் சனியும் ஞாயிறும் ஊர் கதை எல்லாம் பேசினாலும், அந்த கடைசி நாப்பது  நிமிட நடைல பேசின விஷயங்கள் பல நாட்களுக்கு  மறக்காது. சில நேரங்கள்ல அது அப்பாவையோ தங்கையையோ பற்றிய குறையாய் இருக்கும். சில நேரங்கள அது பக்கத்துக்கு வீட்டு சண்டை பத்தி இருக்கும். அம்மா டி.வில பார்த்த  சினிமா பத்தியோ, கோவில் திருவிழா பற்றியோ இருக்கும். என்ன பேசினோம் என்பதை விட, அந்த தருணங்களை  அம்மாவுடன் கழிப்பதே முக்கியமாய் இருந்தது.  'பேசினோம்' என்று நான் இடுகை முழுக்க சொன்னாலும், அம்மா பேச, நான் வெறும் "ம்" கொட்டிகிட்டே நடப்பேன். 


 "அப்பா திட்டினது எல்லாம் மனசுல வச்சுக்காத", "நல்லா சாப்புடு என்ன", "நல்லா படிக்கணும் தம்பி" , "அப்பாவ விட எனக்கு நீ தான் உசிரு", "அவன் சொன்னான் இவன் சொன்னான் அப்படினு தப்பான பழக்கம் எல்லாம் பழக கூடாது" சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னாலும், அவை எதுவுமே வெறுப்பை தந்தது இல்லை. எதோ நான் விமானம் ஏற போற மாதிரி, பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் எனக்காக ஒரு பெரிய பிரார்த்தனை. . "அடுத்த வாரம் வருவீல?","பஸ்ல நிக்காம உக்கார்ந்து போ",ரூபா பத்திரம். இது போதும்ல? ". "இங்க பஸ் ஏறுனா சீட்டு கெடைக்காது. நீ பெரிய பஸ் ஸ்டான்ட் போய் பஸ் ஏறு. நாலு ரூபா போனா போகுது'..இது ரெண்டு ரூபா குடுக்காம சந்தைக்கு நடக்குற அம்மாவிடம் இருந்து.  






அதுக்கு அப்புறம் நான் வேலை கிடைத்து மங்களூர் போகும் போதும், அம்மா தான் எப்பவுமே பேருந்து நிலையம் வரை கூட வருவாங்க. ஒரு சில தடவ கூட்டமே இல்லாம பேருந்து வந்தாலும் நான் "அடுத்த பஸ்ல போறேன்" அப்படின்னு சொல்லி இன்னும் கொஞ்சம் நேரம் பேசுவோம். இப்பொழுது அம்மாவின் அறிவுரைகள் மாறி இருந்தன. "கெட்ட பழக்கங்களை" பற்றி தான் பெரும்பாலவை இருக்கும். இடை இடையே "பத்திரம் தம்பி","கடல் பக்கம் போகாத", "ஆபிஸ்ல சண்ட போடாத" "இவ்ளோ சம்பளம் குடுக்குறாங்களே, அதுக்கு ஏத்த வேல வாங்கு வாங்கலோ?" "சிக்கிரம் தூங்கிரு. என்ன?", "போன்  பண்ண மறந்துறாத"...இன்றும் எதுவுமே மறக்கவில்லை.


அமெரிக்க விமானம் ஏறிய நாள், அம்மா கண்களில் சொல்ல வந்த ஆனா சொல்ல முடியாத பல கவிதைகள்/கனவுகள்/வருத்தமான சந்தோசங்கள்/சந்தோஷமான வருத்தங்கள். அது ஒரு தனி கதை, இன்னொரு நாள் எழுதுறதா இருக்கேன்.


அம்மா சொன்னது மட்டும் ஆயிரம் கதைகள் இல்லை, அம்மா என்ற சொல்லுக்குள்ளும் ஆயிரம் கதைகள் இருகின்றன!!

Sunday, 14 February 2010

இந்த வாரம் பார்த்த படங்கள்

இந்த வார இறுதியில் பெரிதாய் வேற ஒன்னும் வேலை இல்லை என்பதாலும், நான் பார்க்க வேண்டும் என்று டவுன்லோட் செய்த படங்களின் எண்ணிக்கை கூடிக கொண்டே போவதாலும் (நான் இருக்க எடத்துல  இந்திய படங்கள் திரையிட படுவதில்லை. இன்னும் ஒரு காரணம் கூடிய சிக்கிரம் இந்தியா வர வேண்டும் என்று முயன்று கொண்டு இருப்பதற்கு.:) )

சரி பார்த்த படங்கள் பற்றிய என் கருத்து. விமர்சனம் இல்லை மக்கா. வெறும் கருத்து.

முதல பார்த்த படம் அசல். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தான் பார்க்க ஆரம்பிதேன். நான் மசாலா படம் பார்த்து ரெம்ப நாள் ஆகியிருந்ததாலும், அஜித்தின் சமீபத்திய பேச்சுக்கள் எனக்கு பிடித்து இருந்ததாலும்,அசல் பார்க்க முடிவெடுத்தேன். சரி நேர படத்துக்கு போவோம். என்ன தான் எதிர்பார்ப்பே இல்லை என்றாலும், அஜித்-சரண் கூட்டணி இன்னும் கொஞ்சம் நல்ல படத்த தந்து இருக்கலாமுன்னு நினைக்குறேன். படம் தமிழ் நாட்டை தவிர உலகில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஏனோ தனியாய் கேட்ட பொழுது பிடித்த பாடல்கள், படத்தில் பிடிக்கவில்லை. மசாலா படத்தில் பாடல் படத்தோடு ஓட்டும் என்று எதிர்பார்க்க கூடாது தான், ஆனால் பாடல்களில், ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டாமா? தல, நீங்க இளைய தளபதிய பார்த்து கத்துக்க வேண்டியது நிறைய  இருக்கு. படம் பில்லா-வை அடிக்கடி  ஞாபகம் படுத்தியது, கடியாய் இருந்தது. அஜித்தை தவிர படத்தில் யாருக்கும் நடிக்க வாய்ப்பு கிடையாது. அடுத்த தடவ இன்னொரு மசாலா படம்னு விமர்சனம் படித்தால், நான்  அஜித் படம்  பார்க்க மாட்டேன்னு நினைகிறேன். அட வெறும் மசாலா தான, அப்போ புது நடிகர்கள் படம் பார்போம்மே, புதுசா ஏதாவது இருக்கும். எதுக்கு அஜித்?

வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது. பல இடங்களில் படத்த fast forward செய்ய முடிந்தது. அசலில் அசலா எதுவும் இல்லை .





ரெண்டாவது படம், தமிழ்ப்படம்,கலக்கிட்டாங்க மக்கா. விழுந்து விழுந்து சிரிச்சேன். இத்தனைக்கும் எனக்கு "லொள்ளு சபா" ரெம்ப பிடிக்காது.
சிவா சரியான தேர்வு. கதை, திரைக்கதை எல்லாமே சூப்பர். எத்தன நாள் ஆச்சு இப்படி சிரிச்சு?  விசு படம் பார்த்தப்போ சிரிச்சது, வடிவேலு-வின் புலிகேசிக்கு சிரிச்சது. கண்டிப்பா நான் இந்தியா வரப்போ என் அப்பா அம்மாவோட  இந்த படம் பார்ப்பேன். இப்படி படம் எடுங்களேன் இயக்குனர்களே, வீட்டுல எல்லாரும் ரசிச்சு, படத்த பத்தி ஒரு ரெண்டு மூனு நாள் பேசி, படம் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக வேண்டும். 2010 பத்தி, அஞ்சு வருஷம் கழிச்சு பேசுனா, இந்த படம் அதில் ஒரு பகுதியா இருக்கும். படத்தின் வசனம் எழுதிய நண்பர் வலைப்பக்கம் இதோ.


வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது. பல இடங்களில் படத்த rewind/repeat செய்ய முடிந்தது என் படுக்கையில் உருண்டு புரண்டு  வாய் விட்டு சிரித்து, அழுகை வர சிரித்து, என் கன்னட roommates என்னை ஒரு மாதிரியாய் பார்க்கும் அளவுக்கு படத்தை ரசிக்க முடிந்தது. 

தமிழ் படம். திகட்டாத நகைச்சுவை.




அடுத்து பார்த்த படம், ஆயிரத்தில் ஒருவன். விமர்சனகளில் பின்னுட்டம் இட்ட பொழுது,  நான் இது மாதிரி புது முயற்சிகளை ஆதரிக்கனும்னு சொன்னேன். தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு எண்ணம் இப்போ. படம் எனக்கு புரிஞ்சுது. (அல்லது நான் அப்படி தான் நினைக்கிறேன்௦). அவதாரோட இதை ஒப்பிட முடியாது, ஒப்பிட கூடாது. ஆனால் இது தான் நம்மை உலக சினிமாவுக்கு எடுத்து செல்லும் முயற்சியா? இன்னும் பத்து வருடம் கழித்து இப்படிப்பட்ட சினிமாவை தான் நாம் பார்க்க விரும்புகிறோமா?  அன்பே சிவம்,சேது, ரோஜா, மொழி, பாம்பே, இந்தியன் இந்த படங்கள் எல்லாமே என்னை பொறுத்தவரை பல உலக படங்களுடன் அவற்றை ஒப்பிட வைத்தன. அய்யா செல்வா ராகவன், உலக சினிமாவுக்கு கொண்டு செல்றதுன்னா, உடனே படம் முழுக்க கெட்ட வார்த்தையும், 'Skin Show'um இல்லை. உலகம் நம்மட்ட  என்ன இருக்குனு பார்க்க விரும்புதே தவிர, அவங்கள மாதிரி படம் எடுக்க சொல்லல. நல்ல கதை இது. இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு திரைகதை எழுதி, தேவை இல்லாத செக்ஸ்ச விட்டுட்டு (சில இடங்களில் தேவைனா சரி, பார்த்திபனை மயக்க செக்ஸ் தேவை தான், ஆனா கார்த்தி கூட தேவையே இல்லாத உரையாடல்களை தவிர்க்கலாம்). உங்க வட்டத்த விட்டு வெளிய வாங்க செல்வா. செக்ஸ் இல்லாம ஒரு படம் எடுங்களேன் ப்ளீஸ்.


வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது. பல இடங்களில் படத்த freeze செய்து  secreenshot எடுக்க செய்ய முடிந்தது ஹி ஹி. :)


ஆயிரத்தில் ஒருவன். மிஸ் பண்ணிடிங்களே செல்வா.


கடைசியா பார்த்தது "My Name is Khan".ஹிந்தி படம். ஷாருக்கும், இயக்குனர் கரணும், ரெம்ப தெளிவா யார் மனதையும் புண்படுத்தாமல் அழகாய் சொல்ல வந்த விசயத்த சொல்லிருக்காங்க.

9/11 2001-kku பிறகு அமெரிக்காவில் வாழும் ஒரு முஸ்லிமின் கதை. ஓரே ஒரு வசனத்தை சுற்றி படம் ஓடுகிறது. "My name is khan and I am not a terrorist". ரெம்ப சிக்கலான கதை. ஒரு நுனி தவறினாலும், ஏதாவது ஒரு சமுகம் ஆத்திரம் அடைந்து விடும். "பாம்பே"யின் சாயல் பல இடங்களில்.  படத்தில் எல்லாருமே அழகாய் நடித்து இருக்கிறார்கள். ஷாருக் நடிப்பு தனியாய் பாராட்டப்பட வேண்டியது. படத்தோட அஸ்திவாரமே கதை தான்.அதனால அத பத்தி நான் பேச மாட்டேன். பின்னணி இசை பிரமாதம். கேமரா உண்மையான அமெரிக்காவை கவர் செய்து இருக்கு. ஒபமாவாய் நடித்தவர் அவரை நல்லாவே இமிட்டே செய்றார். போர் அடிக்காத திரைக்கதை, நம்ம தமிழ் ஆளுங்க நிறைய பேர் இந்த படத்துல இருந்து நிறைய கத்துக்கலாம். பதிவர்களே, நம்ம பர்தா பற்றிய விவாதம் எல்லாம் படத்துல வருது. இந்த படம் கண்டிப்பாய் எல்லாரும் பார்க்க வேண்டிய ஒன்று.

படம் பார்த்த உடன, நான் போட்ட டுவிட் இது:


@iamsrk @kjohar25 #MNIK.vry gd movie.cant come out of movie, hrs after seeing it.I am Senthil and i am proud to have friends with name 'Khan'


My Name is Khan. Don't ever miss it, especially if your name is not Khan.:) அப்புறம் நீங்க  இந்த  படம் பத்தி என்ன சொல்ல்றாங்கனு கேட்க ஆர்வம்மா இருக்கேன். யாராவாது படம் பார்த்து இருந்தா உங்க கருத்த சொல்லுங்களேன். 


வீட்டுல பார்த்தது ஒரு வகையில் நல்லது அப்படின்னு சொல்ல மாட்டேன். இந்த படத்த நான் தியேட்டர்ல பார்த்து இருக்கனும். மிஸ் பண்ணிட்டேன்.  :(


Saturday, 6 February 2010

ஆஸ்கார் - போட்டியில் இருக்கும் இந்தி(ய) படம்

இந்த வருட ஆஸ்கார் பேச்சுக்கள்  எல்லாம் "அவதார்" பற்றி பேசி கொண்டிருக்க, சத்தம் இல்லாமல் ஒரு ஹிந்தி படம் ஆஸ்கார் கடைசி சுற்றியில் விளையாடி கொண்டிருக்கிறது. படம் பெயர் "கவி" . புது செய்தியா இருக்கா? எனக்கும் இன்னைக்கு தான் தெரியும்.. இந்த படம் இந்தியாவில் நடக்கும் அடிமைத்தனம் பற்றிய படம்.. பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்ல தான். ஆனால் நம்முடைய பிரச்சனைகளை பற்றி பேச மறுப்பதும் ஞாயம் இல்லை தானே.
"Short Flim" - Live actions பிரிவில் வருது. மொத்தமே பதினேழு நிமிடம் தான்..படத்தில் திரைக்கு பின்னால் வேலை பார்த்த யாரும் இந்தியராய் தெரியவில்லை..

ஆதி, வாய்ப்ப தவற விட்டுடிங்களே.. இந்த குறும்படத்த நீங்க அனுப்பி இருக்கனும்...ஹி ஹி

படத்தின் முன்னோட்டம் (இந்த வார்த்தையை உபயோகித்து எத்தன வருஷம் ஆச்சு....கடைசியா தூர்தர்ஷனில் இந்த நிகழ்ச்சி வந்த பொழுது உபயோகித்தது)


Kavi (www.KaviTheMovie.com) from Gregg Helvey on Vimeo.